
தமிழருக்குப் பேரிழப்பு - சுஜாதா மறைவு
ரங்கராஜன் என்கிற சுஜாதா நேற்று இயற்கை எய்தினார். தற்கால தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பெற்றவர். அறிவியலை அனைவருக்கும் அருமையாய் அள்ளித் தந்தவர்.
அடிப்படையில் ஒரு பொறியாளரான இவர், வாக்குப்பதிவு இயந்திர வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் பெரும் பங்கு வகித்தார்.
ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். இவரது மறைவு தமிழர்க்குப் பேரிழப்பு. இன்னொரு சுஜாதா வர இனி எத்தனை நாட்களாகுமோ?!
No comments:
Post a Comment